City Updates

சென்னையில் 25 ஆண்டுகள் சேவை: சுந்தரம் ஃபைனான்ஸ் வைட்ஸ் ரோடு கிளை வெள்ளிவிழா

சென்னை: சென்னை வைட்ஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் சுந்தரம் ஃபைனான்ஸ் கமர்ஷியல் கிளை, தனது சேவையின் 25-வது ஆண்டை நிறைவு செய்து வெள்ளிவிழாவைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்களுடனான நீண்டகால உறவு, பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு ஆகியவை சிறப்பாக நினைவுகூரப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய சுந்தரம் ஃபைனான்ஸின் தமிழ்நாடு பிராந்தியத் தலைவரும், முதுநிலை துணைத் தலைவருமான ராஜேஷ் வெங்கட், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நேர்மை, நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையே எனக் குறிப்பிட்டார். சென்னை வைட்ஸ் ரோடு கிளை, உள்ளூர் மக்களின் நம்பிக்கையால் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கிளை, சென்னையில் நிதிச் சேவைகளை பல்வேறு தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறு வணிகர்கள், முதல் முறையாக கடன் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கிளை சேவையாற்றி வருவதாக கிளையின் சீனியர் மேலாளர் எச். ரமேஷ் பாபு தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த கிளை, பல தலைமுறைகளாக நிதி ஆதரவை வழங்கி வருவதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் மனிதநேய அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. நிறுவனத்தின் சார்பில், ராஜேஷ் வெங்கட் கையொப்பமிட்ட பாராட்டுக் கடிதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

2029-ஆம் ஆண்டு சுந்தரம் ஃபைனான்ஸ் தனது 75-வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ள நிலையில், சென்னை வைட்ஸ் ரோடு கிளையின் இந்த 25-வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் சேவைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *