SRM–WCSC இணைந்து அஞ்சூரில் கிராம சேவை திட்டம் தொடக்கம்
காட்டாங்குளத்தூர், பிப்.10:
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), உலக சமூக சேவை மையம் (WCSC) உடன் இணைந்து, உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட அஞ்சூர் கிராமத்தில் கிராம சேவை திட்டத்தை தொடங்கியுள்ளது. திறன் மேம்பாடு, ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் சமூக பங்கேற்பு மூலம் நிலையான கிராமப்புற வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.

துணைவேந்தர் டாக்டர் சி. முத்தமிழ்ச்செல்வன், இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள் முக்கியம் என வலியுறுத்தினார். WCSC ஆதரவுடன் கிராம சேவை மையம் நிறுவப்பட்டு, இலவச Simplified Kundalini Yoga பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

வாழ்வாதார மேம்பாட்டிற்காக தையல் பயிற்சி மற்றும் ஐந்து தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற நிகழ்வில் கிராம மக்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், SRM பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் WCSC உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த முயற்சி அஞ்சூரை திறன்மிக்க மற்றும் ஆரோக்கியமான கிராமமாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
