City Updates

கலாம் ஆராய்ச்சி விருது – தேசிய அறிவியல் தினத்தில் வழங்கிய எஸ்.ஆர்.எம்.

காட்டாங்குளத்தூர்: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தேசிய அறிவியல் தினத்தை 28 பிப்ரவரி 2026 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. 2026 ஆம் ஆண்டிற்கான “Women in Science: Catalysing Viksit Bharat” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

வளர்ந்து வரும் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பெண்கள் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆற்றும் பங்களிப்பை இந்நிகழ்வு வலியுறுத்தியது. மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி-ஈ டாக்டர் அகிலேஷ் குமார் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய அறிவியல் புதுமைகள், பல்துறை ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த பெண்கள் விஞ்ஞானிகள் ஆற்றும் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் முன்னுதாரணங்களாக திகழ்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தர் (மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பிரிவு) டாக்டர் நிதின் எம். நாகர்கர் தலைமை தாங்கினார். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிகளை மேலும் வலுப்படுத்தவும், இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 2026 ஆம் ஆண்டிற்கான “டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆராய்ச்சி விருது” சிறந்த ஆராய்ச்சி பங்களிப்புகளைச் செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய 360-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ‘சான்சிலர் அவார்ட்’ வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பல துறைகளில் பரவலாகவும், ஆழமான முறையிலும் செயல்பட்டு வருவதை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது.

தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அறிவியலின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதே இதன் நோக்கமாகும். இந்நிகழ்வின் மூலம், புதுமை சார்ந்த கல்வி, அறிவியல் முன்னேற்றம் மற்றும் தேச நிர்மாணத்தில் தன்னுடைய அர்ப்பணிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *