City Updates

SRM பல்கலைக்கழகத்தில் 3,032 பேர் இணைந்து “வந்தே மாதரம்” உலக சாதனை முயற்சி

காட்டாங்குளத்தூர்: நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்” உருவானதின் 150-வது ஆண்டை முன்னிட்டு, SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SRMIST) இன்று ஒரு பிரம்மாண்டமான உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியது.

மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் மொத்தம் 3,032 பேர் கலந்து, “VANDE MATARAM” என்ற சொற்றொடரை மாபெரும் மனித உருவ அமைப்பாக உருவாக்கினர். நாட்டின் ஒற்றுமையும் தேசிய அடையாளமும் வெளிப்படும் வகையில் பங்கேற்றோர் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களில் ஆடைகளை அணிந்திருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய SRMIST பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி, “இந்த முயற்சி SRMIST சமூகத்தின் ஒற்றுமை உணர்வையும், கூட்டுப் பொறுப்பையும் பிரதிபலிக்கிறது. மனித உருவ அமைப்பின் மூலம் வந்தே மாதரத்தை உருவாக்குவது ஒழுக்கம் மற்றும் ஈடுபாட்டை காட்டுகிறது,” என்றார்.

vante mataram 150 years srm university 1

தமிழ் பேராயத் தலைவர் டாக்டர் கரு. நாகராசன் கூறுகையில்,“வந்தே மாதரம் பாடல் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆயிரக்கணக்கான நபர்களின் பங்கேற்பின் மூலம், இதன் 150 ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தை நாம் கௌரவிக்கிறோம்,”
என்றார்.

இந்த நிகழ்வின் மூலம் SRMIST, மாணவர்களில் தேசபக்தி மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதில் தன்னுடைய உறுதியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *