City Updates

பிரசாந்த் மருத்துவமனையின் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை: சென்னையில் அமைந்துள்ள பிரசாந்த் மருத்துவமனையின் சார்பில் மூளை செயல்பாட்டு விழிப்புணர்வு மாதத்தையொட்டி பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#StopTheBlock என்னும் டிஜிட்டல் பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டு பக்கவாதத்தின் அறிகுறிகள், பாதிப்புகள், தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மனித மூளையின் மாதிரி வடிவம் கொண்டு நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் சென்னையில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்த பிரச்சார வாகனத்தை மணலி மாநகர காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு வேடிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டு ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடு முழுவதும் கோடை மற்றும் குளிர்காலங்களில் பக்கவாத நோய் அதிகரித்து வருவதால் #StopTheBlock என்னும் இந்த விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை பிரசாந்த் மருத்துவமனை துவக்கி உள்ளது.

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், தேசிய அளவிலும் உலக அளவிலும் பக்கவாதம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ என்னும் எங்களின் பிரச்சாரத்திற்குப் பிறகு, இந்த #StopTheBlock நமது மக்களின் ஆரோக்கியத்திற்கான மற்றொரு சிறந்த மற்றும் பொருத்தமான முயற்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

பக்கவாத சிகிச்சையில் முக்கியமான ‘பொற்காலம்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இது சென்னை முழுவதும் சுமார் 20 லட்சம் மக்களை சென்றடையும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பக்கவாத ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து விரைவாகச் செயல்படுவது குறித்து சமூகத்திற்குக் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது சம்பந்தமான ஆபத்துகளைக் கணிசமாகக் குறைத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் செய்லபடும் பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் பாரி முத்துக்குமார் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் பக்கவாதம் பாதிப்பு 51% அதிகரித்துள்ளது, 2021-ம் ஆண்டில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியது, அத்துடன் இளைஞர்கள் இடையே பக்கவாதம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது இது குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளபோதிலும், ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது. அதற்காக, நாங்கள் எங்கள் #StopThe Block பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம், மேலும் இந்த முயற்சியின் மூலம் சென்னை நகர மக்கள் சரியான நேரத்தில் பக்கவாத அறிகுறிகளை கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் உட்பட அந்தந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்லது நடத்த விரும்புபவர்கள் 99417 66850 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *