City Updates

சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் விழா 2026 ஜனவரி 8 ஆம் தேதி துவக்கம்

சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மயிலாப்பூர் விழாவின் 22 – ஆவது பதிப்பு வருகின்ற 8 முதல் 11 – ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் இந்த விழா, சென்னை நகரத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை இசை, நடனம், பாரம்பரிய நடைபயணம், கோலம், தெரு நாடகம் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கொண்டாடுகிறது.

வருடாந்திர கலாச்சார நிகழ்வாக, இந்த விழா பொது இடங்களை கலை மற்றும் பாரம்பரியத்தின் உயிரோட்டமான மேடையாக மாற்றுகிறது. நகரம் முழுவதும் உள்ள பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களை ஈர்க்கும் இந்த விழா, சென்னை ‘கலாச்சாரத்தின் மையம்’ என்ற அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு, சுந்தரம் ஃபைனான்ஸ் ப்ளூ கிரீன் மைல் முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. EFI (Environmental Foundation of India) உடன் இணைந்து, “Grow Your Food” என்ற திட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு சமையலறை தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் ப்ளூ கிரீன் கிளப் எனும் ஆன்லைன் சமூகத்தில் இணைவார்கள். EFI இந்தக் குழுவை வழிநடத்தும். இந்த முயற்சி நாடு முழுவதும் சுந்தரம் ஃபைனான்ஸ் கிளைகளின் Green Task Force (GTF) மூலம் விரிவுபடுத்தப்படும்.

15 – ஆவது ஆண்டாக, சுந்தரம் ஃபைனான்ஸ் “Say No to Plastic Bags” இயக்கத்தை முன்னெடுக்கிறது. விழா நாட்களில் 10,000 துணி பைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். கூடுதலாக, “Keep Mylapore Clean” இயக்கம் என்னும் திட்டத்தின் மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை, கபாலீஸ்வரர் கோவிலில் இசை கச்சேரி நடைபெறும். சிறுவர்களுக்காக சதுரங்கப் போட்டி (8, 10, 12 வயதுக்குட்பட்டோர்) மற்றும் கைவினைப் பயிற்சி (காகித குவில்லிங், பானை ஓவியம்) ஆகியவை ஜனவரி 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் லேடி சிவசாமி ஐயர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக Spirit of Mylapore என்னும் விருது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மைலாப்பூரில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கும், ஸ்தாபங்கங்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்டுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா ஜனவரி 11 அன்று மாலை 6:30 மணிக்கு அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *