City Updates

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கிய கவின்கேர் நிறுவனம்

சென்னை: சென்னை வெயிலில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களுக்கு கவின்கேர் நிறுவனம் தனது பால் மூலம் தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான கவின்ஸ் பாதாம் பாலினை வழங்கியது.

கவின்ஸ் சியர்ஸ் டிராஃபிக் ஹீரோஸ் (Cavin’s Cheers Traffic Heroes) என்ற தனது திட்டத்தின் மூலம் சென்னையின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சியான பாதாம் பால் வழங்கப்பட்டது.

இதன் துவக்க நிகழ்வு சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில், அடையாறு வட்ட உதவி போக்குவரத்து காவல் ஆணையர் கோடிச்செல்வன், கிண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, கவின்கேர் நிறுவனத்தின் குளிர்பான பிரிவு வணிகத் தலைவர் மல்லிகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு குளிர்பானங்களையும், போக்குவரத்திற்கு தேவையான பேரிகார்டுகளைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இதுகுறித்து, கவின்கேர் நிறுவனத்தின் குளிர்பான பிரிவு வணிகத் தலைவர் மல்லிகேஸ்வரன் கூறுகையில், மக்களுக்காக குளிர், மழை, வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சேவையாற்றி வரும் நமது போக்குவரத்து காவல் ஹீரோக்களை கௌரவிக்கும் ஒரு சிறிய முயற்சியை எங்களது நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வு நன்றி தெரிவிப்பு அல்ல, போக்குவரத்து காவலர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதையும், எங்களது நிறுவனத்தின் சமூக பங்களிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *