சவீதா பல்கலைக்கழக பேராசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது
சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் அசோக்குமார் சுந்தரமூர்த்தி என்பவருக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கியுள்ளது.
கடந்த 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் இவ்விருதினை பேராசிரியருக்கு வழங்கினார்.
பல இளங்கலை மற்றும் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார் பேராசிரியர் அசோக்குமார் சுந்தரமூர்த்தி. இவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் அயல்நாடுகளில் ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.